புதன், 14 டிசம்பர், 2011

Tuesday, November 22, 2011


Tuesday, November 22, 2011

ஏன்?


உன்னோடு சண்டையிட்டு, பிறகு
சமாதனம் சொல்லி கட்டி அழும்போது
இருக்கும் இன்பம்,
உன்னோடு சிரித்துப்
பேசும்போது கூட
இருப்பதில்லையே ஏன்?
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

பெருமூச்சு



எதை பார்த்து இப்படி உனக்கு பெருமூச்சு?
சன்னலுக்கு வியர்த்துவிட்டது.!!
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

சுகம்


உன் பெருமூச்சில் காற்று உணர்ந்திருக்கும்
தென்றலின் சுகத்தை. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Monday, November 21, 2011

அவசியமற்றுப்போனது


புத்தக பரிசளிப்பில் அன்புடன் என்று எழுதி
உன் பெயரையும் எழுதி தந்து சென்றாய்..
உன் பெயர் தவிர
மற்றவை சுவார(அவ)சியமற்றுப்போனது.. 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

நீ


சூரியனை சுற்றியதை காட்டிலும்
பூமி உன்னையே
அதிகம் சுற்றியிருக்கும்.  
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

ஏதாவது?



உன்
சிரிப்போ, சாபமோ, கோபமோ
ஏதாவதொன்றில்
ஏதுமற்றதும்
எதவதாகிவிடுகிறது..
என்னைபோலவே..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

கோலங்கள்


புற்கள் மீது நீ போட்ட கோலங்கள்
பூக்களாய் பூத்திருகிறது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

ஈரம்

நீ குளித்தபின் காற்றிடம்
கெஞ்சிகொண்டிருக்கிறது கூந்தலின் ஈரம்
உலர்த்தி விடாதே என்று..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

சிம்பொனி


உன் சிரிப்பொலியை
திருட வந்த சிம்பொனி
உன் கொலுசொலியிடம்
மாட்டிக்கொண்டது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

என்னவென்று சொல்வது?


உயிரைக் கொன்று சதை தின்பதை
மாமிசபட்சினி என்றால்,
உயிரை தின்னும் உன்னை
என்னவென்று சொல்வது?
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

நீ...



சபிக்கபட்ட காதலிடம் இருந்து மோட்சம் கொடுத்தாய் நீ...


நீரூற்று உன் பெயரூற்றி போகிறது...


புள்ளியாக்கபட்ட என் பிம்பத்தின் இறுதி நீ...
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

சாரல்


மேகம் கொஞ்சிபோனது
உன்னை,
சாரலால். 
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

பார்வை.



இனிக்க இனிக்க
மிளகாய் தருகிறது
உன் பார்வை.
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Thursday, November 17, 2011

மழை


மேகம் அட்சதை தூவி நடத்துகிறது
நம் திருமணத்தை..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

எப்படி அறிவாய்..?


நான் உன்னை விட அதிக உயரமாய் இருப்பதால்
முத்தமிட முடியவில்லை என்று
வருத்தப்படுகிறாய்..
நான் உயரமாய் இல்லாமல் இருந்தால்
உன்னை கட்டிக்கொள்ளும்போது
என் இதயம்
உன் பெயர் சொல்லி துடிப்பதை
எப்படி அறிவாய்..?!!
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Wednesday, November 2, 2011

துளி

மழையின் 
ஒவ்வொரு துளியும் 
உன்னை பருகவே விழுகிறது..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

உனக்காய் நான்

உனக்காய்
படைக்கப்பட்டவைகளில் 
முதலாமவன் நான்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

Tuesday, November 1, 2011

வெகுளி

நான் தெரிந்தே உன்மேல் மோத..
நீ தெரியாமல் மோத..
வெகுளியாய் விழித்துக்கொண்டது 
காதல், உன் முகத்தில்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

கட்டிகொள்

கட்டிகொள்.. 
மழை, மேகங்களை 
நனைக்காமல் இருக்கட்டும்..
இக்கவிதை பிடித்திருந்தால் கருத்துரையிடுங்கள்..நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக