புதன், 12 டிசம்பர், 2012

மனதைத் திற - சின்ன சின்ன சந்தோசங்கள்!


   ஒவ்வொருவரும் ஒரு குறிக்கோளுடன் சாதனைக்காய் லட்சியத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கிறோம்! அந்த லட்சியம் என்னவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்! நிறைய கார்களுடன் பெரிய வீடு வாங்குவது, பெரிய பணக்காரராய் ஆவது என எப்படிப்பட்ட குறிக்கோளாகவும்கூட அது இருக்கலாம்!

குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்! - மனதைத் திற 2!


குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தராதீர்! - மனதைத் திற 2!

  நீங்கள், நான் ஏன் எல்லோருமே குழந்தையாய் இருந்து வளரும்போது ஒவ்வொரு செயலும், செய்கையும் நமது பெற்றோர், சகோதரர் அல்லது அருகிலிருக்கும் வேறு யாரேனும் - இவர்களைப் பார்த்தே உங்கள் நடை, உடை பாவனைகள் வந்திருக்கும்! உதாரணமாய் உங்கள் தந்தை நல்ல நகைச்சுவையாளர் என்றால் உங்களுக்கும் அந்த நகைச்சுவைப் பழக்கம் தானாகவே தொற்றிக்கொள்ளும்! இப்படியாக வளர வளர மொழி, உடை உடுத்துதல்,  உண்ணுதல் என ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் வளரும் சூழலே தீர்மானிக்கிறது

கல்விமுறை – உருவாகும் எந்திரங்கள்! மனதைத் திற!



  எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இந்தியா மேப் வரைந்துகொண்டிருந்தார். அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து வர்ணம் அடிக்க வேண்டும். எப்படிப் பிரிப்பது என்று கேட்டார்.

“மொத்த நீளம் எவ்வளவு என்று அள” என்றேன்.

“30 CM”

“30 CM-ல் பாதி எவ்வளவு?

திரு திருவென முழித்து “20 CM”

“நல்லா யோசிச்சு சொல்லு”

8 CM அண்ணா” என்றது.

நீயே அதை வரைந்துகொள் என்று கிளம்பிவிட்டேன்.