வியாழன், 8 டிசம்பர், 2011

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


தோழியே!!!



அன்பினிலே.
தாயின் மறு உருவமானாய்
தந்தையின் பொறுப்பானாய்
அறிவுரையில் அக்காளானாய்
அதட்டுதலில் அண்ணானாய்
சம உரிமை அளித்திடும் தங்கையாய்
அறிவுரை சொல்லுகையில்
என் பாட்டி கூட - உன்னிடம்
பாடம் கற்கும் ஆசானாய்
தோழியே!!!
ஒரு உருவில் என்
குடும்பததைக் கண்டேன் உன்னில்....

காலமும் தன் கடமையாய் செய்ய
நாட்களும் அதுவாக தொலைய
எல்லைகளும் படிப்படியாக அதிக்கரிக்க
உள்வாங்கப்பட்ட புது உறவால்
ஊசல் ஆடத் தொடங்கியது நம் நட்பு
பூவாய்....
பிஞ்சாய்...
காயாய்....
கனியான நம் நட்பு
அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பால்
அந்தரிக்கும் நிலையிது வேதனையே...

மாற்றம் என்பது மாறாததொன்று - இது
யாவரும் பிதற்றும் கோஷம்
வேண்டவே வேண்டாம்
மாற்றத்திற்கு புது அர்த்தம் கொடுபோம்
கை தொடுத்திடு என்னுடன்
நட்பில் ஏது வேற்றுமை
உலகிற்கே பறைசாற்றுவோம்
வெற்றி கோசம் முழங்குவோம்
இமயத்தையும் தாண்டி
விசாலமானது நம் நட்பு என்று....

அவன் நினைவுகள்.....


காத்திருந்து காத்திருந்து
காலங்கள் கரைந்த
ஏக்கங்களுகம் அதிகரித்த
நாடி நரம்புகள் துடிக்க
அவன் வருகைக்காய் 
காத்திருந்த - அக் கணப்பொழுதுகள்
இன்று நினைக்கையில்
இனிமையான நினைவுகள்
வலியுடன் கலந்து
புதுவித உணர்வுகளை - என்னுள்
பிறப்பிக்கின்றன இன்னும்....

நட்பில் வளர்ந்த காதல்
வீரியம் கொண்டு வளர்கையில்
என் இதயம் அகற்றி
இன்னொரு இதயம் சுமக்கையில்
பல ஆயிரம் நட்சத்திரங்களில்
நானும் ஒன்றையாய்
பிரகாசித்த தருணங்கள்
இன்றும் இனிக்கின்றன.

தொலைபேசியில் அழைப்பில்
சிணுக்கிடும் அவன் பெயர்
செல்லமாய் எனை அழைப்தாய்
இன்றும் ஓர் பிரமை 
என்னைச் சுற்றி....

விடியாத இரவுகளில்
முடிவுறாத அவன் நினைவுகள்
இளமையின் துடிப்பில்
வெட்கப்படும் மனசு
பசுமையான நினைவுகள்
இன்றும் படர்கின்றன என்னில்...

காத்திருப்பு....


கன்னியவள் கை பிடிக்க
கண் தூங்கும் நேரம் முதல்
காலை வரை திரண்டு வரும்
கனவுகளில் தினம் மூழ்கி
கடந்தோடும் மணிந்துளிகள் ஒவ்வொன்றும்
கலந்து பெருக அவள் நினைவு - இன்ப
களிப்பினிலே அவன் மனம்.

கானும் காட்சியெல்லாம்
கன்னியவளாய் தோன்றிட
ஒலிக்கின்ற ஓசையிலே - அவள்
நாமம் தித்தித்திட
இசையும் இனிமையும்
இணைந்த இன்பத்தில்
இவ்வூலகில் அவன் இன்று

மனதினிலே மாளிகை கட்டி
மன கற்பனையில் வாழும் அவன்
மண மஞ்சமதில் மாலை சூட்டி - தன்
மனைவியாய் மனைதனை
அலங்கரிக்கும் அன்நாளுக்காய்
அல்லும் பகலும் காத்திருக்கின்றான்.....

உண்மையான நட்பு.....



உலகில்
இறைவனின் படைப்பான
அழகிய சிற்பமான
பல சிற்பிகளால் - இணைந்து
செதுக்கப்படும்
இல்லை இல்லை
உடல் வளர்ந்து 
உயிர் கொடுக்கும்
உன்னதாமான உறவாக 
நட்பு...

தாம் வாழ 
பிறரை வருத்தும் உறவில்
தன்னை வருத்தி
பிறரை சிரிக்க வைக்கும்
உண்மையான,
தூய்மையான,
நம்பிக்கையான,
துன்பத்தில் சம பங்கு தருவதே
உண்மையான நட்பு.....

அந்த நிமிடத்தில்...


நேற்று தொடங்கி
இன்று வரை நீடித்த
என் உள்ளத்து உணர்வுகள்
அடங்கியே போனது - இன்று
அந்த சில நிமிடங்களில்....

காதல் என்னும் வானத்தில்
சுற்றி திரியும் பறவைகளில்
நானும் விதிவிலக்கல்ல.
அவளை காணும் வரையில்...

இனிமையான நினைவுகளினால்
இதழ் விரிக்கும் உணர்வுகள் - என்னி்ல்
தினம் தினம் அதிகரிக்க
காத்திருக்கும் கணபொழுதுகள்
பெரும் மூச்சுடனே
கரைந்தே போய் இருந்தன
இன்று வரை....

கணிசமான கணப்பொழுதுகள்
கழிகின்றது அவளுடனேயே..
இருந்தும்
தனிமையும் வெறுமையும்
எனை ஆட்கொள்ள
தவியாய் தவிந்தது மனசு...

ஏதோ..
ஒரு வித உணர்வு பிறக்க
ஒப்புவித்தேன் என்
உள்ளத்து உணர்வுகளை.
பலமாக யோசித்தவள்
பரிவாக எனை நோக்கி
பச்சை கொடி காட்டியதினால்,
சிறகுகள் இன்றியே
பறக்கிறேன் வானில்
பாக்கியசாலி நான் என்று....
 
****************************************************************************

நினைவலைகள்...



அன்றொரு நாள்
தனிமையின் பிடியில்
நாழிகைகளை கழிக்கையில்
நயமுடன் என்னருகில் - நீ
மனமுருக பேசியதும்
மயங்கி வரும் 
மாலைப்பொழுதில்
வலிக்க வலிக்க
உதட்டில் - நீ
பதிந்த முத்தமும்
சுற்றி சுற்றி வந்து
என் மனதை
கொள்ளையடித்த தினமும்...
தனிமையை போக்கிட
தலையணையாய்
எனை மாற்றிய குணமும்...
ஞாபகப் படுத்துகிறது
உன்னை...
தினம் தினம்!!!

துரோகியாய்.....


அன்பே!!
இனிமையான உணர்வுகளினால்
பின்ணி பிணைந்த நம் உறவு
இன்று சுருதி இழந்து
முட்களால் நிறைந்த
ரோஐாவனமாய் போனதடி
நம் காதல்.

நீ 
இன்று மெளனத்தினால்
காதல் மொழி பேசுகையில்
சோர்வடைந்து போகுதடி 
என் இதயம்...

நிமிடங்கள் 
மணித்தியாலங்களாக மாற
அளவின்றி காலங்களும் கரைய
பேசிப் பேசியே - நாம்
வளர்த்த காதல் செடி இன்று
முகாரி ராகம பாடும்
முறையில் தான்
நியாயம்முண்டோ?

உன் 
கண்கள் சிந்தும்
ஒரு துளி நீர் கண்டு
என் இதயம்
உதிரம் வடிக்கும்
உண்மை நிலை - 
அறியாயோ?

வானுக்கு ஒர் நிலா போல்
என் வாழ்வில்
வசந்தங்கள் வீசும்
பெளர்ணமி நிலா நீயடி
நிலாவான நீ எனக்கு
நிலை குலைந்து போகையில்
நிம்மதி இழக்கின்றேன்
அத் தருணத்திலே....

என் இதயத்தில்
வலி ஆயிரம் - உன்னிடம்
சொல்லிட துடிக்குது
தினம் தினம்
நிம்மதியாய் நீ வாழ
உணர்வை அடக்கி
உயிரை உருக்கி
நாம் பிரிந்து
பிறர் வாழ - நம்
காதல் சாம்பிராஐயத்தில்
நான் இன்று 
துரோகியாய்.....

ஒற்றைவழி பாதை தேடி....

 காதல் செய்த மாயத்தினால்
கன்னியிவள் விட்ட பிழையிது
பெற்றவர்கள் கண்கலங்க
பெரியவர்கள் ஆசியின்றி
உற்றவனை கைபிடித்து
இல்லறத்துள் கால் பதித்தாள்

உறவுகள் தேவையில்லை
உடையவன் போதுமென
உதறிவிட்டாள் உறவுகளை
தனிமையிலே ஒரு ஜோடி
ஒற்றைவழி பாதை தேடி
ஒற்றுமையை தொலைத்தனரிங்கு..

தனிமைபட்ட வாழ்க்கையில்
தம்பிழையுணர்ந்திங்கு
தனித்தனியே புலம்பியென்ன பயன்
பிழைசெய்ய தூண்டுவது காதலா?
இல்லை அவர் அவர் மனமா?
இல்லையேல் பருவமறியா காதலா?
ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்தும்
ஆறுதலின்றி அலையிதிங்கே இரு ஜீவன்.!

காதலில் மயங்கி கற்பனையில் மிதந்து
கற்பனையில் வாழ்ந்திடலாம்
நடைமுறையில் சாத்தியமா?
இவ்விருவுள்ளம் புரியவில்லை
நடைமுறை வாழ்க்கையினை...!

வாழ எண்ணி வாசல் 
தாண்டி வந்தவர்கள்-இன்று
வாழ்வை எண்ணி 
கலங்குகின்றார்களே...
வாழ வழிகாட்ட யாருமின்றி
வாடி போன மனமுடனே
கதிகலங்கி நிற்கும் 
இவ் இரு உள்ளங்களை 
சாதியினை காரணம்  சொல்லி
மன்னிப்பினை கொடுத்திட மறுத்து
தள்ளியே வைத்தனர் உறவுகள்...!

பிழை செய்தர் தம் பிழையினை
மனதார உணரும் வேளை
மன்னிப்பினை வழங்காத உறவுகள்
மரணித்து வாழும் மனசில்லா உயிர்கள்...!

புரிதலின்றி...

 மனம் சோரும் மறு நொடியே
என் மனதறிந்து நடந்திட 

வேண்டுமடா நீ-என
கூறிட வேண்டி மனம் 

கற்பனை வளர்த்திடும்
மறுநொடி தடுத்திடும் அதே மனம்
பாசத்தை அளந்திடு
புரிதல் எனும் கருவி கொண்டு...!

மன்றியிடும் என் கண்கள்
உன் கண்களுக்கு தெரியலயா?
மரணத்தை தேடும் என் மனதை
உன் மனதால்  புரிந்திடத்தான் முடியலையா?
உனக்கு புரிதல் தான் இல்லையா?

காதலுக்கு தேவை புரிதலென்றாய் அன்று
ஆனால்...
காதலே புரிதலின்றி போனது இன்று..
!

நான் யார் உனக்கு?


உன்னுடன் பழகியது குற்றமா
உன்னில் காதல் கொண்டது குற்றமா
உரைத்திடு  உண்மையை 
உன்னை  விட்டு செல்லுகின்றேன்...


உறவுகளை வெறுத்தேன் 
உன்னத நட்புக்களை இழந்தேன் 
உடையுடன் நடையை மாற்றினேன்
உனக்காக எல்லாம் உனக்காக....


என்நிலை தெரிந்தும் 
என்னை வார்த்தையாலே 
எள்ளி நகையாடுகின்றாய் 
வலிக்க வலிக்க...!
எட்டாப்பழம் புளிக்குமென்று தெரிந்தும்
என்னை ஏன் காதலித்தாய்?


எதுவரினும் எதிர்த்திடுவேன் 
என்றும் உன்னை நான் மறவேன்
என்றென்றும் நீ வேண்டுமென்றாய்
என் உயிரே நீ என்றாய்
எல்லாமே வார்த்தைஜாலமா?


நான் உனக்காக எதையிழக்க 
உனையிழக்க நான் தயாரில்லை 
எனையிழக்க நீ தாயரெனில்
உன் முடிக்கு தடைபோட 
நான் யார் உனக்கு?...
****************************************************************************

உன்னத உறவு....

தனிமையில் பிடியில்
இனிமைகள் தொலைந்து
பாலைவனமான வாழ்கையில்
பாசம் எனும் உணவுக்கு
வறுமையில் வாடும் போது

சூரியன் உதிக்க
இதழ் விரிக்கும் பூக்கள் போல
காலை நேர பனியில்
உயிர்பெறும் புற்களை போல
அன்றும் என் வாழ்வில்
புத்துயிர் அளிக்க
என் கரம் பிடித்த
உன்னத உறவு ஒன்று.

அன்பினை அமிர்தமாய் அளித்து
ஆசைகளை இனம் காண வைத்து
உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து
உரிமையினை நிலைநாட்டி
என் திறமைகளை எனக்கே
புடம் போட்டு காட்டிய
உன்னத உறவு ஒன்று..

காலங்களும் இனிமையாய் கழிய
காதலும் நம்முள் தோன்ற
பாலைவன வாழ்கை
சோலைவனங்களாக மாற
பட்டாம்பூச்சிகள் எனை சூழ
காதலில் திழைக்க வைத்த
உன்னத உறவு ஒன்று.

காதலையும் படைத்த கடவுள்
பிரிவு என்னும் கொடுமையும்
சேர்ந்தே படைத்தாரே என்னமோ
பருவங்களில் மாற்றம் வைத்த - கடவுள்
காதலிலும் புரட்சி செய்தாரோ?
இனிமைகளின் உணர்வுக்குள்
பிரிவின் வலிகள் ஒளித்திருப்பதை
அன்று அறிந்திருக்கவில்லை
இப் பேதை இதயம்..

இரத்த நாளங்களை கருக்கி
உணர்வுகளை பலியாக்கி
காதலையும் இழந்து
உறவும் தொலைவாகி போக - மீண்டும்
பாலைவன வாழ்க்கையில்
வறுமையின் பிடியில்
கண்ணீருடன் காத்திருக்கிறேன்
தொலைவாகி போன
என் உயிரான 
உன்னத உறவின் வரவுக்காய்.....

மாற்றம்...



பரந்து பட்ட உலகில்
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப
மாற்றம்மின்றி சிக்கி தவிக்கிறது மாற்றம்.

பத்து மாதம் சுமத்து
பாசத்துடன் பாலூட்டி
பாசம் காட்டும்
அன்னைக்கும் சேய்கும்
இடையில் ஏற்படும்
வயதில் மாற்றம்...

சுமையை இனிமையாய் சுமத்து
குடும்பம் தழைத்திட
அல்லும் பகலும் உழைத்து
சேய் வாழ தான் சிரிக்கும்
தந்தைக்கும் பிள்ளைக்கும்
இடையில் ஏற்படும்
தனிமையில் மாற்றம்...

ஓர் கொடியில் பூத்து
பாச மலர்களாக
ஓர் தட்டில் உணவருத்தி
ஓர் கூட்டில் வாழும்
சகோதரங்களுக்கு
இடையில் ஏற்படும்
பிரிவில் மாற்றம்....

ஓடியாடி விளையாடி
அறிவு என்னும்
சுவையை பகிர்ந்து
வாழ்வின் சிகரத்தை அடைய
பாடசாலை தரும்
கல்வியில் மாற்றம்....

வாழ்க்கை என்னும் கடலில்
நீச்சல் எனும் ஊடலில் இணைய
கணவன் எனும் துடுப்பை
கை பிடிக்கும் தருணத்தில்
பெண்ணின் பிறப்பில் மாற்றம்..

மாற்றங்களோ
இன்றும் மாற்றமின்றி
மாறிக் கொண்டே இருக்கின்றது...

பாசம்...


பாசத்திற்கில்லை எல்லை
பாவம் இந்த கோபம் - அப்
பாவியாய் தோற்று நிக்கிறது
பழகிய உறவுகளிடையே..

பாசம் இதன் எல்லைக்குள்
பலம் சேர்ந்து போட்டியிட
பல ஜென்மம் எடுத்தாலும்
பலியாகி போகிறது - அது
பாசத்திற்குள்ளே இங்கும்

பசியிது மறந்து
பகல் இரவெல்லாம்
பகையிது வளர்திடுமோ என
பாவையிவள் பட்ட துயர்
பகிடிக்கு கூட இந்த
பாரினில் யாருக்கும் வேண்டாம்

பண்புடன் பழகுவதும்
பகிர்ந்து கதை பேசுவதும்
பசுமைதனை மீட்டிடவே
பாரினில் கிடைத்திட்ட - புனித
பரிசாம் அழியாத பாசம்.

நட்பின் நாயகியை...




வண்ண வண்ண மலர்களெல்லாம்
வாசம் வீச வந்துதித்த
வையம் என்னும் தோட்டத்திலே
வசந்தகால புதுவரவாய்
வந்துதிந்த வண்ண மலரே


பாசமதில் மீதமின்றி
பாரினிலே பாச தாயாய்
கணவனுக்கு காலமெல்லாம் காதலியாய்
நட்பினிலே நாயகியாய்
அனைவருக்கும் அன்புருவாய்
அகிலமதில் அலை மோதுதம்மா உன் அன்பு


உதட்டு வழி புன்னகையும்
உள்ளத்து வண்ணங்களும்
உலகமதில் என்றும் நிலைத்திட
உருவேற்று உயிர்பெற்று
புது மலராய் நீ மலர்ந்து
மணம் பரப்பிற்ற இன் நன்நாள்போல்
என்நாளும் புலர்ந்திட
நானும் உனை வாழ்த்துகின்றேன்.


(என்னை கவிதையில் வாழ்த்திய அன்பு உறவுக்கு நன்றிகள்)

பெண்ணே!!!
அறியாயோ
ஓர் சேதி
பகலை விழுங்கி
இரவினை கக்கும்
பொழுதினிலே
வெளியில் வராதே
பொறாமைப்படும் நிலா
உன் முகத்தைப் பார்த்து.....!
************************************************************************

நட்பு


தோழியே,
உன் பிரிவில் கூட
இனிமையான நினைவுகள்
என்னுள் ரீங்காரம் போடுகின்ற
நாம் பழகி தொலை நாட்களை.

இணையம் செய்த புரட்சியால்
இணைந்த நம் நட்பு
இனிமையாய் நகர்கையில்
இடைநடுவில் வந்த
இடைவெளியும் விலகிடும்
இனிமையும் தொடர்ந்திடும்
விடியாத இரவுகள்
மீண்டும் மலர்ந்திடும்
நம் நட்பின் ஆழம்
நாலு பேருக்கு புரிந்திடும்
நம்பிக்கையே வாழ்வையாய் - நீ
நகர்ந்து செல்கையில்
நிழல் போல் தொடர்ந்திடுவேன்
என்றும்  நட்பாய்......

இ(எ)ன்றும் காதலர்களாய்.....

பாசம் என்னும் வலையில் சிக்கி
பரி தவிக்கின்றேன் பாரினில்..
பாவங்கள் போக்கிட
பாரிகாரம் தேடுகின்றேன்...

விதி தேவன் வரைந்திட்ட
பாதை வழியினிலே
நான் கடந்திட்ட
கடின பாதைகளும் எத்தனையோ....
அன்றும் அப்படித்தான்
மனம் சோர்ந்து தவித்திருக்கையில்
கடவுளின் கிருபையால்
மண்ணுலகில் அவதாரித்த
மானுட தெய்வமாக
அன்று அவள் எனக்கு
வரமாய் கிடைத்தாள்..

அன்பு என்னும் ஒன்றுக்கு
அநாதையாய் அலைந்து
ரணமாய் போய் இருந்த
என் இதய கூட்டுக்கு
அமைதி தரும் இனியவளாய்
என்னருகில் அவள் அன்று..

பசித்தவனுக்கு பாயசம்
கிடைத்தாற் போல்
என்னுள்ளும் பல
மாற்றங்களை ஏற்படுத்திய
மகத்தான உறவான அவள்
நல்ல அம்மாவாக....
நல்ல தோழியாக..
நல்ல காதலியாக...
நல்ல மனைவியாக...

சந்தோசம் என்னும் வானில்
சிறகடித்து திரிந்த பறவைகளாய் - நாம்
காலத்தின் கோலத்தால்
பிரிவு என்னும் அரக்கானால்
திசை மாறி பறந்து
நினைவுகள் என்னும்
சுமையினை சுமந்து
கனவுகள் என்னும் வாழ்வில்
காலத்தைக் கழிக்கின்றோம்
இன்றும் காதலர்களாய்.....

திசைமாறும் உலகில்.!

 தனிமையில் பேசிட 
தயக்கமாய் அழைத்தவளை
தன்னிலை மறந்து ரசித்தவனாய்..!
மகிழ்விலே நனைந்தவனாய் 
மலருடன் வந்தானே
மலர்விழியாழைக்கான...!

அழைத்ததன் நோக்கம்
அவனாறியாமால் ஆகாயமே
அவனுள் அடங்கியதாய் மகிழ்வில்
அசைபோட்டான் கற்பனைகளில்..!

மலருடன் மனதையும் தன்னுள் மறைத்து
மலர்விழி பேச்சுக்காய் மௌனமாய் நோக்கிட
மனதோடு போராடும் அவள் முகம் கண்டு
மகிழ்வினை இழந்தான் மனதுள் இருள்சூழ.!

அவள் முகம் வாடினால் அறிவான் அவள் வலி
அசைவிலே புரிந்திடும் அவள் மொழி
அணைந்திட தோன்றிடும் அவன் கரம்
அனைத்தையும் செய்திட அவன் தேடல்
அவனுக்கு உரிமை உறவாய் அவளாக வேண்டும்...!

அவன் ஏக்கமாய்  நோக்க அவள் பார்வை திசைமாற
அசைபோட்டான இருஉள்ளம் தனிதனியே..!
அதிகம் பேச பாஷையின்றி அழைத்தன் காரணத்தை
அவன்முகாம் பாராமலே செப்பிட்டாள்.!

மனதோடு போராடி  மரணித்த மனதுடன்  போகின்றேன் 
மரணவலியிலும் உன்னை மறவாவலி பெரிதடா
மண்னோடு  மரணிக்க எண்ணியும் மறுக்கின்ற என் மனசாட்சி
என்னோடு போரடி உன்னைவிட்டு செல்லுதடா-என்று 
சொல்லியழ வந்தவளை மனசாட்சி தடுத்திட
தன் கல்யாண பத்திரிகையினை காட்டிச்சென்றாள்..!

தனித்தனியே இரு உள்ளம் தனிமைக்காதலாய்
ஒருவரையொருவாரறியாமல் 
ஒத்தைவழி செல்கின்றனர் ஒருதலைகாதலுடன்
அவனறியான் அவள் காதல் அவளறியாள் அவன்காதல்
யாருமறியார் இவர்கள் காதல்
விதியறிந்த இறைவன் தெரிந்தும் தெரியாமல் இவர்கள் காதல்..!

மலருடன் மனதையும் மறைத்தவனாய்
மனதோடு தோற்று மகிழ்வின்றி அவனின்று.
மணவாழ்வில் மகிழ்விருந்து 
மகிழ்வை ஏற்க மறுத்தவளாய் அவளின்று.!

பெண்ணின் அவலம்...


பெண்ணின் பெருமை பேசும்
இவ்வுலகின் வாழ்வுதனில்
பெண்ணின் வேதனைகள் தான் எத்தனையோ!
இளமைப் பருவ காதலுடன்
இனிமையாய் காலத்தை கழிக்கும்
கன்னியரின் கல்யாண கனவு
மணவறையுடனே மரித்திடும்
மாயம் தான் என்னவோ...

ஆண்கள் என்னும் ஆதிக்க வலையில்
பெண்ணுக்கு விலை பேசும்
பேதகர்களின் ஆசையினால்
முதிர்கன்னிகளின் வேதனைகள் எத்தனையோ?

வீதிகளின் நடக்கையில்
காமுகரி்களில் கண்ணில் பட்டு
காலமெல்லாம் கண்ணீருடன் 
காலத்தை கழிக்கும் 
பெண்கள் தான் எத்தனையோ?

சுடும் சூரியனாய் சுட்டெரிக்கும்
ஆடவன் வார்த்தைகளால்-மனம்
கல்லான பெண்கள் எத்தனையோ
கல்லறை தேடிய பெண்கள் எத்தனையோ

முகம் தெரிய புது உறவை
மணவாழ்க்கை என தேர்ந்தேடுத்து
சந்தேகம் என்னும் தீயில்
தினமும் தீக்குளித்து
பிறந்த வீட்டுமை பெருமை காக்க
தம் உணர்வுகளை தீயாக்கும்
பெண்கள் தான் எத்தனையோ?

இவர்கள் தான் 
பாரதி கண்ட 
புதுமைப் பெண்களா?

உறவாக....

 உண்மை உறவுகள்
உலகத்தில் எத்தனை
உள்ளம் அறியாமல்
உருகுதே நெஞ்சம்

கருவினிலே எனை தாங்கி
உதிரத்தை எனதாக்கியவள்
உறவாடி மகிழ முன்னே
உலகத்தை நீந்து விட்டாள்

மடி தந்து பசியாற்றி
பாசத்தை பகிர்ந்திட்ட
வாழ்வின் வழிகாட்டி - பாதி
வாழியினிலே ஏனோ தவிக்க விட்டு
தாயிடம் தானும் சென்றதினால்...

பள்ளித் தோழமையால்
பசுமைதனை உணர்கையில்
பருவகாலம் முடிந்தமையால்
பல திசையில் பறந்து சென்றோர்
பாசத்திலும் வறுமை..

தாங்கிட வேண்டிய நேரத்தில்
தவிக்க விட்டு சென்றதினால்
ஏங்கிய உள்ளமிது
ஏற்க மறுக்குது
அன்புதனை உறவாக....
***********************************************************************

குட்டிக்கவிதை..!

நினைவுகள்
தித்திக்கும் உன் நினைவுகள்-என்னை
தீண்டிடும் தென்றலாய் எந்நாளும்....!

**************************************
தேயாநிலவாய்
துள்ளிவரும் புள்ளிமானாய்
தூயவளே உன்னை கண்டேன்
தெய்வம் தந்தவரமடி எனக்கு
தேயாநிலவாய் என் வாழ்வில் நீயடி..!

**************************************
இரு உள்ளம்
சாதி மதபேதத்தால் 
தனித்திங்கே இருஉள்ளம் 
தவிக்கின்றன தனித்தனியே..!!!

**************************************
பெண் நிலவு
வானம் பார்த்து நிலா ரசிக்கையில்
என்னருகில் இன்னொரு நிலவு.!
*************************************
தரையினிலே
“உயரத்திலே வான்மேகம் 
அதன்நடுவே வெள்ளிநிலா”
வானம் நானடி
வெள்ளிநிலா நீயடி..!

இன்பமும் துன்பமும்

எண்ணங்களெல்லாம் - ஏன்
எம்முள்ளே உருவாகின
எம்மை அறியாமல்
எல்லை அற்று விரிகின்றன
அவை தினம் தினம்...

ஏக்கங்களுக்குள்ளே
தாக்கு பிடிக்காது
சிக்கித் தவிக்கும்
மனம் இதற்காய்
எல்லையை உருவாக்க
எண்ணங்களை முந்தியே
விரைதிட்ட போதிலும்
அங்கேயும் முடியவில்லை

ஒருவித ஊக்கம்
உள்ளுக்குள் உத்வேகம்
சிற்சில மாற்றம்
சில நேரம் தயக்கம்
சொற்ப நேரத்தில்
செயலுடன் இணைந்தே
சிந்தையும் பயணிக்குது

முயற்சியால் புரட்சியில்
எழுச்சி பெற்றிட்ட
எண்ணங்களால் என்றுமே
புன்னகை முகத்தினிலே
பிறர் எழுச்சியில்
வீழ்ச்சியே எண்ணிடும்
நெஞ்சங்கள் முகத்தில்
எள்ளளவில் கூட எங்கையும்
காணவில்லை இன்பத்தில்

எழுவதில் தவறில்லை
எண்ணங்கள் பலவும் - அதை
ஏற்று நடப்பவர்
கைகளில் உள்ளது
இன்பமும் துன்பமும்

-தோழி பிரஷா-

ஆயுள் கைதி


உள்ளத்தால் இணைந்து
உறவில் கலந்திட்ட
உள்ளங்கள் இரண்டிங்கு
உண்மை உணர்வினை சொல்லிட
உதடுகள் துடிக்குது
உள்ளே ஏதோ தடுக்குது

காதலின் விதியா?
காலத்தின் சதியா?
உணர்ந்திட்ட போதிலும்
உரைக்க மறுக்குது
உள்ளம் உண்மைதனை இங்கு.

நிலையது என்ன
நெஞ்சத்தில் ஏக்கம்
நினைவினில் தாக்கம்
தூக்கமும் போச்சு
வேதனையே வாழ்வின்
அடுத்த நிலையாச்சு

சொல்லவும் முடியாமல்
மெல்லவும் முடியாமல்
மெளனத்தினை துணைக்கழைத்து
விழிநீரை பலியாக்கி
கனவுலகில் காலத்தை கழித்து
காதல் என்னும் இராச்சியத்தில்
ஆயுள் கைதியாக 
இன்று நானிங்கு..

டயரியில்.

 தண்ணீரில் தாமரைபோல்
கண்ணீரில் நானின்று...!
 உறவுகள் பல உண்டு 
போலியாய் உரிமை கூற...
பொறுப்புடன் எமைக்காக்க
எமைவிட்டால் வேறாரு இங்குண்டு?

உண்மை பாசமெங்குண்டு
ஊமையிவள் தேடுகின்றேன்
எங்குமே கிடைக்கவில்லை
ஏக்கத்துடன் வாழுகின்றேன்..!

தேடித்தேடி தொலைத்தேன்  பாசத்தை
தேடாமல் தொலைத்னே் நம்பிக்கையை.!
என் இன்ப துன்பங்களை
தொலையாமல் காத்தேன் டயரியில்.

இசையின் திசையிலே....!

 இதமான பூங்காற்றுடன்
இனிய ராகத்தையே
தினம் தினம் மீட்டியவள் - இன்று
ஸ்வரங்களை தொலைந்து
சுருதியில் சேர்ப்பதால்
இசை தான் பிறக்குமா?
சுகம் அது கிடைக்குமா?

ராகங்கள் பலவிதம்
அதன் ரசனைகள் பல சுகம்
தாளத்திற்கு இசையவே
காலத்திற்கு ஒத்துபோகுதே

வாழ்க்கை என்னும் பாடலில்
வசந்தம் எனும் சுகம் காண
பாசம் என்னும் ஸ்வரங்கள்
காலம் என்னும் தாளத்தோடு தப்பாது
சுருதியில் சுய விருப்புடன்
இணையும் இதயங்களிலிருந்தே
இசை மீட்ட காத்திருக்கையிலே
ஸ்வரங்கள் இடம் மாறியதால்
இசை வரும் இசையின் திசையிலே
இனிமையும் மறந்தது....
*******************************************************************************

அவன் நினைவுகள்..

 பார்த்தவுடன் புரியவில்லை
பழகும் போது தெரியவில்லை
பாசம் தந்து கொல்லும் என்று
பிரிவே என்னை வதைக்கிறது
இதுவரை உணராத
உயிர் கொல்லி நோய் போன்று..

அணி வகுந்து வந்தே
இதய ரணத்தில் மேலும்
துளைக்கிறது அவன் நினைவுகள்
காணும் பசும் காட்சிகளெல்லாம்
கானெல் என வெறுக்கிறது
கரும்பு கூட கசக்கிறது
தென்றல் கூட சுடுகிறது.

வாசம் வீசிட்ட
மலர் இதனை வண்டு
அரிந்து சென்றதினால்
வழியில் உதிர்ந்து வாடிற்றே

தேவை எது என அறியாமல்
தேவையற்று புலம்புகிறேன் - காரணம்
காதல் என்னும் பாதையிலே
கற்பனைகள் பல வளர்த்து
கை கோர்த்து வந்தவன்.
கண்னெதிரே இன்னொருத்தி
கைபிடித்து மங்கை இவள்
என் மனையாள் என்றதினால்..... 

அன்னையே.....

 அகிலம் இதில் எம்
அவதாரம் அதற்காய்
அந்திபகல் கண்விழித்து
ஐயிரண்டு திங்களாய்
அகத்தினிலே எமை தாங்கி
அன்புதனை அமுதாக்கி - எமை
ஆளாக்கிய அன்னையே

உலகத்தில் இல்லையம்மா
உவமை சொல்ல
உமக்கு ஈடேதும்
தவிழும் வயதில்
தாய் மடி தந்தாய்
இளமைப் பருவத்தில் 
இமையாய் இருந்தாய்
துன்பம் எமை 
தொடாமல் இருப்பதற்காய்
தூக்கத்தினை நீ மறந்தாய்

ஆயுள் வரை ஆருயிராய்
அன்பில் அமுத சுரபியாய்
எமை ஆளும் அன்னையே
அனுதினமும் வாழ்த்தி
வணங்குகின்றோம்......

துரோகம்...

தொலைத்தூரத்தில் இருந்து
தொடர்ந்து வருவதில்லை
நெஞ்சுக்குள் இருந்தே
நம்பிக்கை மீதினில்
நஞ்சினை கக்கியே
நாம் அறியாமலே
நம்முள்ளும் வளர்கிறது துரோகம்.

பொழிந்திடும் அன்பினை
இழந்திடும் போதினிலும்
பொங்கிடும் ஆசைகள்
கரைபுரை ஓடிடும் போதிலும்
தஞ்சமே இன்றி மனம்
தவித்திடும் எண்ணத்தில் - தான்
நினைத்ததை நிறைவேற்ற
போராடும் வேளையில்
பிறர் முன் துரோகி...

நேசிக்கும் நெஞ்சங்களுக்காய்
நினைவுகளை நெஞ்சினில்
புதைத்து பூட்டிடின்
உன்னத உணர்வுகளுக்கும்
உன் மனதுக்கும் நீ துரோகி..

புன்னகையோடு புகழ்ச்சியை
கெடுத்தே தினம்
இழப்புக்களோடு இகழ்ச்சியை
வளர்த்தே அதில்
தன்னை வளர்க்குது துரோகம்.

உழைப்பாளிக்கு.....


தேவைகளை பூர்த்தி செய்ய
தேடலில் இறங்கியவர்
ஆசைகள் அதிகரிக்க
ஆர்வமும் பெருகியதால்
அவற்றினை நிறைவு செய்ய
வேலைகளை தேர்தெடுத்து
சேவைகளை தாம் பகிர்ந்தனர்

சோம்பல்தனை தகர்தெறிந்து
சீரும் சிறப்புடனே நாட்டினிலே
செல்வ வளம் செழிப்பதற்காய்
சிரமமது பாராது உழைக்கிறார்
உடல், உள உழைப்பதனை
உவர்ந்துநீர் வழங்குவதால்
உற்பத்தி பெருகிடவே
உதயமாகும் பொழுதெல்லாம்
உளமகிழ்ந்து வாழ்ந்தனவே
உயிர்களெல்லாம் இவ்வுலகில்.

உயிர்களெல்லாம் உள மகிழ
உதிரத்தை உரமாக்கி
உழைத்திடும் உழைப்பாளி நெஞ்சங்களை 
உவ மகிழ்ந்து வாழ்த்துவோம்.

இவள் - அவன் - அவள்...


வசந்தகால பறவைகளாய்
பாசம் என்னும் சிறகடித்து
வான் உயர பறக்கையிலே
பாதை வழியெல்லாம்
பக்கதுணை தான் இருந்த
அவன் பண்பு அவளிடத்தே
அகிலமதில் ஆண்களுக்கெல்லாம்
அணிமுத்து அவனெனவே
அடையாளம் காட்டியதால்
ஆயுள்வரை உறவாக்கி
அகமகிழ்ந்து வாழ்ந்திடவே
இதயத்தில் இடமொதிக்கி
இரவுபகல் அவன் நினைப்பில்
இணைவதற்காய் இல்வாழ்வில்
காத்திருப்பதை அவனறிய
காரணமே இல்லை..

பாவை அவள் பார்வைபட்டு
பந்தமதில் இணையமலே
பாசத்தினால் மாளிகை கட்டி
நீங்காத அவள் நினைவை
நெஞ்சமதில் குடியிருந்தி
பாட்டாம்பூச்சிகளாய் 
பறந்து வரும் இவர்களை
பல வண்ண மலரெல்லாம்
தேன் சுரந்துநின்று
தென்றலுடன் வாழ்த்து சொல்ல
வரும் கால துணை இவனேனவே
எண்ணிய வஞ்சி அவளும் -அவன்
நினைவுகளைநெஞ்சில் புதைத்தே
பாசம் கொண்ட உள்ளங்கள்
வாசம் வீசியே வையத்தில
வளம் வர வாழ்த்துக் சொல்லி
தன் வ்ழிப்பயணத்தை
துணையேது மின்றியே தொடர்கின்றாள்.
*****************************************************************************
.

அநாதை..


அவதரித்த அரை நொடியில்
அன்னை அருகே அருகாமலே
அரவணைக்க யாருமின்றி
அறியாமலே அழுகின்றேன்
அகிலமதில் எனை வி்ட்டு
தந்தை தன் வழி பற்றியே
தாய் இவளும் - தன் 
பயணத்தினை தொடர்ந்ததினால்

பசியறிந்து பால் ஊட்ட
பக்கதுணை யாருமின்றி
பாட்டிவழி சொந்தமின்றி
பதறியே துடிக்கின்றேன்

சொந்தபந்தம் ஏதுமின்றி
சொல்லியழ வழியுமின்றி
துன்பத்தில் எனை புதைந்து - விட
துளிநீர் கூட மிஞ்சாது
பஞ்சத்தில் வாடும் எனக்கு
பட்டமும் வழங்கி
கெளரவிக்கிறது சமூகம்
அநாதை என்றே என்னை..

பாவப்பட்டவளாய்....


விதி தேவன் வரைந்திட்டான்
விடியலில்லா இரவுகளாய் - என் மனம்
இருட்டில் இருக்க சபித்திட்டான்...
இறைவனிடம் வரம் கேட்டேன்
என்ன பாவம் நான் செய்தேனென்று
பதில் ஏதும் இன்றி
பாவங்களை சுமந்த
வாழ்க்கை வாழ பிறந்தவளாய்
வாழ்கின்றேன் பாரினிலே..
பரிகாரம் செய்து பாவம் போக்கி
  வாழ முயற்சிக்கிறேன் நானும்
ஆயிரம் போராட்டங்கள் மனதினுள்
தோல்வி மட்டும் எனை சூழ

சோர்வின்றி வாழ்கின்றேன் நடைமுறையில்
உறவுகள் நடுவில் போலியாய் சிரித்து
தனிமையில் மனம் சோர்ந்தவளாய்..

நாமும் வாழ்த்துவோம்..

 எனது நண்பன் சிறு வயிதினிலே தாய் தந்தை இழந்து தனித்த போது தாய்க்கு தாயாக இருந்து வாழ்வில் வழிகாட்டி சென்ற தனது அப்பம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை கவிதையாய் இங்கே பகிர்கின்றான்.
85 வது பிறந்தநாளை கொண்டாடும்  அப்பம்மாவுக்கு  எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
பாசத்தின் உறைவிடமே
பரந்த இப் பூமிகூட
போதுதில்லையும்
பாசத்திற்கு எல்லை சொல்ல...

தாய்மடி இழந்த போதும்
தலைவலி உணர்ந்த போதும்
உம்மடியே தந்து
உயிர் காத்த அன்னை நீ...

தந்தைதனை எமக்களித்து - எம்
தந்தையுமாய் தான் இருந்து
அறிவுரைகள் பல பகிர்ந்து
அகிலமதை திகழ வைத்தீர்...

கல்விக்கு ஆசானை
கடமையிலே சேவகியாய்
நோயுற்ற வேளையிலே
உடனிருந்து தாதியுமாய்
தோள் கொடுத்தே தோழியுமாய்
அப்பம்மா என்னும் உம்வுறவில்
அப்பா, அம்மா அன்புடனே
அறிந்து கொண்டோம்
பாசத்தின் பல வகையை
உங்கள் ஓர் உருவில்.

நாம் வாழும் காலமெல்லாம்
வளமுடனே எம்மருகே
எந்நாளும் நீர் இருக்க
நாளும் நாம் நலம் வாழ - நீங்கள்
தினம் அழைக்கும் ஆண்டவனை
நாமும் அழைத்தே
வரம் வேண்டி வாழ்த்துகின்றோம்..

-கம்ஷன்.-

அண்ணனுக்கு ஓர் வாழ்த்து.....

பல வண்ண பூக்கள்
அலங்கரிக்கும் சொந்தமதில்
உள்ளப் பாசமலராய்
வாசம் வீசியே
என்னோடு இணைந்தவரே

புவியிதனில் உம் வரவுக்காய்
புலர்ந்திருந்த பொழுதுபோல
பூவினம் மொட்டவிழ்க்க
புல்லினம் சிறகடிக்க
புலகாங்கிதம் அடைந்தனவே
சூழ்ந்திருந்த சொந்தமெல்லம்...

புதுவசந்தம் வீசிடவே
புறப்படும் முயற்ச்சி எல்லாம்
பூந்தென்றலுடன் இணைந்தே
புன்னகையை கொடுத்திடவே
இன்பமே உறவாக பொழுதெல்லாம்-உம்
இல்லமதில் இதம் வீச.....

அகிலமதை அலங்கரிக்க என்
அண்ணணாய் உருவெடுத்து
அவதாரித்த இன் நன்னாளில்
அனைத்து நலனும் பெற்றே
அகம் மகிழ்ந்தே என்னாளும் வாழ்ந்திடவே
ஆண்டவன் துணைநாடி- நானும்
அன்புடனே வாழ்த்துகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக