மருத்துவம்
சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசி
Published on 7 Dec, 2011 at 21:49 in மருத்துவம் | | No Comments
சளித்தொல்லையால்
பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால்
தற்காலிக நிவாரணம் தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை.
பெரும்பாலும் நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும்
எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி
குறைவாக இருக்கும் போது சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய்படுத்தி
விட்டுத் தான் நம்மைவிட்டு அகலுகிறது.அந்நாட்களில் நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம். சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும்…
ரத்த சோகையை வெளிக்காட்டும் நகங்கள்!!
Published on 5 Dec, 2011 at 12:47 in மருத்துவம் | | No Comments
சிலநேரங்களில்
சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும்.அந்த மாற்றம் தெரிந்தால் உடனே வைத்தியரை அணுகுவது அவசியம். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்.
மேலும் ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால் இயல்பாக நகம் இருக்க வேண்டிய நிறம் மறைந்து வெளுத்து விடும்.
இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அந்த சத்து அதிகம் உள்ள ஈரல், கீரைவகைகள்…
உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்கள்
Published on 4 Dec, 2011 at 16:18 in மருத்துவம் | | No Comments
தூக்கம்
இன்மை – குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும் பெரியவர்களுக்கு ஆறு முதல்
எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் – இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.
மாறுபட்ட உணவு –…
சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் முற்றிய பாகற்காய்!
Published on 4 Dec, 2011 at 14:14 in மருத்துவம் | | No Comments
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் ஏற்படுகிறது. சரியான உணவு
உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம்…
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா?
Published on 2 Dec, 2011 at 4:50 in மருத்துவம் | | No Comments
தோழியின்
திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக்
கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில்
மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப்
பற்றிக்கொள்வது அந்தக் காலம்.இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!
இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ……
முகம் வழுவழுப்பாக இருக்க!
Published on 1 Dec, 2011 at 21:15 in மருத்துவம் | | No Comments
நெற்றியிலும்,
கன்னங்களிலும் பொரிப் பொரியாக உள்ளதா?“முதலில், இது ஏன் ஏற்படுகிறது?:-
தலை வாரும்போது நெற்றியில் சிப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம். பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது… இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.
ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து இழையுங்கள். அதே அளவு சந்தனம் சேர்த்துக் குழையுங்கள். பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால் பொரிகள்…
150 வயது வரை வாழ ஒரு மாத்திரை !
Published on 30 Nov, 2011 at 8:21 in மருத்துவம் | | No Comments
மருத்துவ
துறை வளர்ச்சியின் காரணமாக மனிதனின் சராசரி வயது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறத.
இந்நிலையில் ஆரோக்யமான உடல்நலத்துடன் 150 ஆண்டுகளைக் கடந்து வாழ்வதற்கான மாத்திரையை
கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.இது அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவூஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் பீட்டர் ஸ்மித் கூறுகையில் .
மனிதனுக்கு வயதாவதை ஒத்திப்போடும் மாத்திரையை கண்டுபிடிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 150 ஆண்டுகளைத் தாண்டி வாழ முடியும். அதாவது வயதாவதைத்…
பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்
Published on 28 Nov, 2011 at 22:11 in மருத்துவம் | | No Comments
நெடு
நேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி
பணி செய்தால், அதிக வலி ஏற்படாது.குதிக்கால் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும்,
உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக
பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.கைப் பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாக தோன்றும்….
ஆண்களுக்கு ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!
Published on 27 Nov, 2011 at 19:37 in மருத்துவம் | | No Comments
ஆரோக்கியத்துக்கும்
ஒருபடி மேலாக அழகுக்கு அக்கறை செலுத்தும் காலம் இது! அந்த வகையில், ஆண் – பெண்
இருவருக்குமே ‘தலை’யாயப் பிரச்னையாக இருப்பது தலைமுடி பராமரிப்பு!ஆண்களுக்கு ‘வழுக்கை விழுவதும்’ பெண்களுக்கு ‘முடி உதிர்வதும்’ தீராத தலைவலி! விளம்பரங்களைப் பார்த்து விதவிதமான ஷாம்பூ வகைகளைத் தேடிப் பிடித்து வாங்கித் தலையில் தேய்த்துக் கொள்வது, ஆயிரக்கணக்கில் செலவுசெய்து அறுவைச் சிகிச்சை செய்துகொள்வது… என்று முடிவில்லாமல் தொடர்கிறது ‘முடி’ப் பிரச்னை!
‘சாதாரணத் தலைமுடிப் பிரச்னைக்கு இந்தளவிற்கு யாராவது தலையைப் பிய்த்துக் கொள்வார்களா என்ன?’ என்ற சந்தேகக் கேள்வி இங்கு…
திருமணமான புதிதா? வாங்க வாங்க உங்களுக்குதான் இது
Published on 27 Nov, 2011 at 12:16 in மருத்துவம் | | No Comments
திருமணமான
தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில்
இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு
நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான
பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தான உணவுபுதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும்.
எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக