வெள்ளி, 9 டிசம்பர், 2011

கவிதை என்பது


கவிதை என்பது

கவிதைகள் என்பது:

உயிரின் மீது பதியும்
உயிரெழுத்து
மெய்யின் புலன்களை
மெய்யாகவே புலன்விசாரணை
செய்யும் மெய்யெழுத்து
நிராயுதபாணிகளான
நியாயவான்கட்கு
ஆயுதமாய்க் காக்கும்
ஆயுத எழுத்து

கேள்விக்குறியாய்
கூனிவிட்ட சமுதாயத்தை
ஆச்சர்யக் குறியாய்
ஆகாயமாய்ப் பார்த்திட
ஆன்மபலம் ஊட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக