வெள்ளி, 9 டிசம்பர், 2011

உனக்காக....


உனக்காக....

நான் சாக நினைத்தது
எனக்காக...
அதை மறந்து வாழ்வது
உனக்காக....
தாங்க முடியாத துன்பம்
எனக்கு....
அதையும் தாங்கி வாழ்கிறேன்
உனக்காக....
சிரிக்க முடியாத வேதனை
எனக்கு...
அதையும் தாங்கி
சிரிக்க கற்றுக் கொள்வது
உனக்காக...

உயிரெழுத்தாய் நீ...!

 அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

எழுதியவர் அருந்தா.


முதல் காதல்.

 ஒரு கோடி வானவில்
ஓராயிரம் நட்சத்திரம்
ஒருமித்த வானமதில்
ஒரு வண்ண தேவதையாய்
ஒரு நிலா அவள்...

ஒரு முறை பார்தால் போதும்
ஒன்பதாயிரம் வருடம் வாழ்ந்திடலாம்
ஒரு நாளிகை பார்க்க வேண்டி
ஒரு ஜென்மம் தவமிருந்து .

ஒரு கோடி கண்களுடன்
ஓடக்கரை தேர் அருகில்
ஒரு நாள் காத்திருந்தேன்
ஒரு மயில் தூரத்தில்

ஓரமாய் வந்த அவள் நிலை கண்டு
ஒதுங்கி நின்ற என்னை பார்த்து
ஓ வென்று அழுதவலாய்
ஒரு வார்த்தை சொன்னால்
... மறந்து விடு என்னை....

அவள் சந்தோசமாக வாழவேண்டுமாம்
அவளின் வருங்கால கணவனோடு...

(தோற்றுப்போன முதல் காதலுக்காக வழிந்த நீரை துடைத்து விட்டு எழுதிய முதல் கவிதை.)

என்னை ஈன்றவளே.....

 அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்.

பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டு சென்றதேனம்மா?

நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ?
பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை எனக்கு..

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...

என்னால் நடிக்க கூட முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் நிரந்தரமாக......

நினைவு.....

 நினைவுகளின் உருவமே...
கால்கள் நனைத்துச் செல்லும்
கடல் அலைகள் போல்...
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் உன் நினைவுகள்...
கண்களை நனைத்துச்
கண்ணீரை வரவழத்து
செல்கின்றது என்னில்..
AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA

கோபம்...........

 அன்றைய அவள்
முகத்தில் ஒரு ஆனந்தம்
சூரியன் கூட தன்
இதழ் சுருகி சாந்தம் கொண்டது
அவள் புன்னகையில்

ஆனால் இன்று
நிலவு கூட
அனலை கக்கின்றது
அவளின் கொடிய பார்வையில்

ஏன் இந்த மாற்றம்
அவள் பார்வையில்?

உன் நினைவுகளுடன்...

 மழையில் நனையும்
பட்டாம்பூச்சியாய்...
கண்ணீரில் நனைகிறேன்
உன் நினைவுகளால்..

இறந்திட எண்ணும்
என் இதயம்
உன் நினைவுகளுடன் 
வாழ்ந்திடவும் சொல்லுதடா..

ஏக்கத்தோடு......

நீ
பேசுவதெல்லாம்
நிஐயம் என்று
நினைக்கும்
என்னிடத்திலா
நிஐமாகவே
நீ பேசாமல்
இருக்கிறாரய்!

உன் மெளனம்
அழகானதுதானது
ரசித்திருக்கிறேன்
உயிரை உற்றி
இன்பத்தை கலந்து
பிசைந்து செய்த
உருவமாக...

இருந்தும்
புரியவில்லை - உன்
மெளனத்தின் அர்த்தம்
எனக்கு இன்று

உன் இதழ்
சொரியும் ஓர்
வார்த்தைக்காக
காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு......

என் காதல்.......

 எப்போதும் மெளனத்தை
அலங்கரிக்கும்
உன் வார்த்தைகள்
ஓர் நாள்
காதலின்
பின் கதவை
திறந்து வைக்கக்கூடும்
அதுவரை
உன்கான காத்திருப்பில்
நீ வரும் பாதையில்...

பூங்கொத்தாய்
சிதறிக்கிடக்கும்
என் காதல்.......

கண்ணீர்........

சோதனைகளையும்
வேதனைகளையும்
தாங்க முடியாத
என் இதயம்
விழி வழியே
நீரை சிந்தகின்றது.

அழுவதுக்கு மட்டுமே
சுதந்திரம்
தடுத்துவிடாதீர்கள்
அதனையும்.....
BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB

மெளனம்

 வார்த்தை
இல்லாததால்
மெளனிக்கின்றேன்
அதனால்
தினம் தினம்
நானும்
மரணிக்கின்றேன்
என் காதல் சொல்லாமல்..

பெளர்ணமி நிலா

  இரவு நேர பெளர்ணமி நிலா
வானத்துக்கு பொட்டு வைத்து
அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது.

என் நிலா நீ என்பதால்
ரசிக்கின்றேன் ஆனந்தமாக
இதயத்தை ஆக்கிரமிக்கின்றது
உன் நினைவுகள்
என்றும் இன்ப புதையலாக
உன்நினைவுகள் என்னில்....

அம்மா

கருவில் தாங்கி
உருவினில் உயிர் பெற
உழைத்தவள் அம்மா
உயிர் எழுத்தின்
உண்மை பெயர்
அம்மா

பிரியாமல் இருப்பதற்காய்
பிரிவை வரமாய் கேட்கிறேன்
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு.... 

கசப்பான காதல்

 தனிமையே உலகம்
தனிமையே வாழ்கை
தனிமையே எல்லாம்
என்ற எண்ணத்தை
மாற்ற வைத்தவளே

அன்பென்னும் கோயிலில்
அடைகலம் அடைந்தேன்
உன்னிடத்தில்...

என் சுமைகள் தாங்கும்
சுமைதாங்கியாக
வாழ்கையில் காணத
இன்பத்தின் உருவாமாக நீ அன்று...

வேதனையில் துவண்டு
விழும் போதெல்லாம்
தலை தடவி
ஆறுதல் சொல்லும்
தாயாக நீ அன்று....

வாழ்கையில் தடுமாறும்
தருணங்களில் அறிவுரை கூறும்
நல்ல நட்பாக நீ அன்று....

உணர்வுகளுக்கு
உயிர் கொடுக்கும்
உன்னத
காதலாக நீ அன்று

என் வாழ்வில்
உயிராக..
உணர்வாக...
எண்ணமாக...
இன்பமாக....
எல்லாமா இருந்த நீ

இன்று
நீ வேறு நான் வேறு
என்று வரையறை போடுவது
எந்த வகையில்
ஞாயமடி??

உன் பிரிவில்........

 அழும்போது கூட சிரித்தேன் நீ
என் அருகில் இருக்கும் போது
சிரிப்பதாய் நடிக்கக்கூட
முடியவில்லை உன் பிரிவில்.

உன் நினைவுகள் சுமக்கும்
என் இதயகூடு
சல்லரித்து சாவின்
விளிம்பில் இன்று....

உன்னை மறக்க நினைத்து
விழி மூடும்போதுகூட
உன் விம்பமே காட்சிகளாக
மறக்கவும் முடியவில்லை
நினைக்கவும் உரிமையில்லை.
நரக வேதனையில் நான்...

உன்னோடு கழித்த நாட்கள்
பல ஜென்மங்கள் வாழ்ந்த
இன்பத்தை தந்தாலும்
நீ என்னை பிரியும்
ஒவ்வொரு வினாடியும்
அடுத்த பிறப்பையும்
கொல்லுவதாய் கசக்குதடா
CCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC

பிரபஞ்ச அழகி இவள்

 நிலவு கூட நாணம் 
கொள்கின்றது
வஞ்சி இவள் 
அழகை கண்டு....
பூக்கள் கூட 
மொட்டவிழ்கின்றது
பாவையிவள் 
கூர்விழி கண்டு...
இயற்கையை 
அஞ்ச வைக்கும்
பிரபஞ்ச அழகி இவள் ....

உன் நினைவுகள்

 நீ இறந்தும்
உன் நினைவுகள்
இறக்கவில்லை என்னுள்...
இந்ஜென்மம் சொல்ல முடியா
என் காதலை சொல்லிட
காத்திருக்கிறேன்
மறுஜென்மத்திற்காய்.....

அன்று ஒருகாலம்

அன்று
என் வாழ்வின்
வசந்த காலம்
அவள் என்னருகில்
ஆனந்தத்திற்கு 
எல்லையே இல்லை

சுமைகள் கூட இதமாய் இருந்தன
இருட்டில் கூட வெளிச்சமாய் அவள்
என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி
சிறகுகள் முளைந்த பறவைகளாய்
ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.

அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்

ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்

இன்பம் என்னும் போதையை
என்னுள் உணர வைத்த
வசியக் காரி அவள் என்
காதலி....

கனவு...

என்
கனவில் வந்து
அடிக்கடி தூக்கதைக்
கெடுக்கும் - நீ
நிஐ வாழ்வில்
ஒரு தடவையேனும்
வந்து
உன் புன்னகை
வதனம்
காட்ட என் தான்
மறுக்கிறாய்?

மறுமணம்

உன் நினைவுகள்
ஊற்றெடுக்கும் 
என் தேகத்தில்
மூன்றாம் இதயத்துக்கு
என்ன வேலை?
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
 நீ இறந்தும்
உன் நினைவுகள்
இறக்கவில்லை என்னுள்...
இந்ஜென்மம் சொல்ல முடியா
என் காதலை சொல்லிட
காத்திருக்கிறேன்
மறுஜென்மத்திற்காய்.....
DDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDDD

அன்று ஒருகாலம்

அன்று
என் வாழ்வின்
வசந்த காலம்
அவள் என்னருகில்
ஆனந்தத்திற்கு 
எல்லையே இல்லை

சுமைகள் கூட இதமாய் இருந்தன
இருட்டில் கூட வெளிச்சமாய் அவள்
என்னைச் சுற்றி எங்கும் பட்டாம்பூச்சி
சிறகுகள் முளைந்த பறவைகளாய்
ஆனந்தத்தில் பறந்து திரிந்தோம்.

அவள் வருகைக்காக
காத்திருக்கும் பொழுதில்
கணங்கள் கூட யுகங்களாக மாற
தவிப்பில் கூட ஒருவித ஆனந்தம்

ஒன்றுமே இல்லாத ஒன்றுக்காக
ஏதோ பெரிய குற்றமாக போடும்
அன்புச் சண்டையில் ஆனந்தமே ஆனந்தம்

இன்பம் என்னும் போதையை
என்னுள் உணர வைத்த
வசியக் காரி அவள் என்
காதலி....
FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF

கனவு...

என்
கனவில் வந்து
அடிக்கடி தூக்கதைக்
கெடுக்கும் - நீ
நிஐ வாழ்வில்
ஒரு தடவையேனும்
வந்து
உன் புன்னகை
வதனம்
காட்ட என் தான்
மறுக்கிறாய்?
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

மறுமணம்

உன் நினைவுகள்
ஊற்றெடுக்கும் 
என் தேகத்தில்
மூன்றாம் இதயத்துக்கு
என்ன வேலை?
bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

உன் புன்னகையில்...

 நீ
சிரிக்கும் போதெல்லாம்
புதிதாய் பிறக்கிறேன்
நான்.

மெளனத்தினால்
ஐயாலம்காட்டி
ஆயிரம் வார்த்தைகள் பேசுதடி
உன் புன்னகை...

செவ்விதழ் பூவாக நீ
அதை உறுச்சும் வண்டாக நான்
தென்றல் தீண்டுகையிலும்
என்னவளின் உரசலாக
என்னில் ஓர் உணர்வு...

கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்....
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

நம்பிக்கையில்........

நினைவுகளின்
ஏஐமானாய் நீ
இருப்பதால்.....

 மனதோடு போராடி
தோற்று விட்டேன்
உன்னை மறப்பதற்கு
நீ ஒருமுறை
முயற்சித்து பார்..

அன்புக்காக தவமிருந்து 
தோற்று போகிறேன்
உன்னிடத்தில்.....
விடுவதாய் நானுமில்லை
முயற்சிக்கிறேன் பல வழிகளில்
அன்புக்கு இலக்கணமாய்
நீ இருப்பதால்......

கண்டேன் அன்னையை
உன் விழிகளில்
தவிக்கிறேன் நானும்
உன் மடியில்
தலை சாய்க்க....

வருவாய் என்னும் நம்பிக்கையில்
காத்திருக்கிறேன்
கண்ணீர் துளிகளுடன்...........
nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

பிரியமே.....

என் காதல்
ஞாபங்களை - நீ
இலையுதிர் காலமாய்
நினைத்து
உதிர்த்தெறிந்திருக்கலாம்
ஆனால் நான்
உன் காதல் சில்மிஷங்களை
நிலாக்காலமாய் எண்ணி...
இன்னும்
அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். 
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

எல்லாமே நீ.........

 என் உயிர் துடிப்பின் ஆதாரம்,
என் நினைவுகளின் கருவூலகம்,
என் உறவுகளின் அஸ்திவாரம் ,
என் காதலும், 
என் வாழ்கையும் ,
என் நட்பும்,
என் செல்லமும் ,
என் இன்பத்தின் இருப்பிடம் ,
என் கோபத்தின் காரணம்,
எல்லாமே நீயாக இருக்கும் போது
நான் மட்டும் எப்படி வேறாவேன்???
ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

உன் ஸ்பரிசங்களால்.....

 என்னில்
பல அதிசயங்கள்
நிகழ்த்திய கடவுள் நீ

நீ என்னருகில்
உன் ஸ்பரிசங்களின்
தீண்டல்களால் உண்டான
இன்பம் அரவணைத்து 
கொள்கின்றது என்னை....

நானோ சந்தோசத்தில்
துள்ளி குதிக்கிறேன்
கட்டி தழுவுகிறேன்
சற்று நேரத்தில்
எங்கும் வெறுமையாய்
கண் விழித்துப் பார்க்கிறேன்
வெட்கத்தில் கண் சிமிட்டுகின்றது
என் தலையணை
என் அறியாமைய் கண்டு...

கரை தொடும் அலை போல்
உன் நினைவலைகள்
என்னில் ....
bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb

இவள் இன்று..

 உறவுகள் பல இருந்தும்
தனிமையாய் இவள் மனம்...
நரகத்தில் வாழ்ந்திடும்
நங்கையாய் 
இவள் இன்று...

பாசமெனும் போலித்திரை போடும்
உறவுகள் நடுவினிலே
நடைபிணாமாய்
ஊர்வலம் வருகின்றாள்
இவள் இன்று.....

இறைவனும் அறியானோ?
இவள் துன்பம் தீரானோ?
kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

தேவதையே....

 உணர்வுகளுக்கு உயிர்
கொடுக்கும் தேவதையே
உன் பார்வையின்றி
துடிக்க மறுக்கின்றது 
என் இதயம்

புரிந்தும் நீ
புரியாமல் இருப்பது ஏனோ?
தேடுகின்றேன் உன்னை
வாராயோ என் அருகில்
gggggggggggggggggggggggggggggggggggggg
 

நான் மட்டும்

 உன்னோடு
பேசிக் கொள்ள
இரவுகளை நாடினேன்
நீயோ
விடியல் தேடி
பறந்து சென்றுவிட்டாய்
நான் மட்டும்
இன்னும் இருளுக்குள்...
ffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffff

சாபங்கள்

 இதயத்து
ரணங்களை
ஆற்றுப்படுத்தும்
ஒரு வார்தைக்காகத்
தவமிருக்கும் போதெல்லாம்
வரமாய் வருகின்றது
சாபங்கள்.....
ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

காத்திருக்கிறேன்...

 என்
உணர்வுகளுக்கு
உயிர் கொடுத்து
உன் நெஞ்சில்
காதல் கற்பம் சுமத்தும்
தாயாக எனக்கு நீ....

ஆனால் இன்று...
சூழ்நிலை கைதியாக நீயும்
உணர்வுகள் இழந்தவனாக நானும்
தடுமாறும் தருணங்கள் பல...

உனக்கும் எனக்கும்
இடைவெளிகள் அதிகரித்தாலும்
உணர்விலும் உள்ளத்திலும்
நெருக்கம் அதிகமே
நீயே உலகமென
உன் நினைவுகளை
சுமந்து அலையும்
காதல் கிறுக்கனாக நான்..

நிலா நீ
முகம் காட்ட
வருவாயேன
என் பகல்களையே
இரவாக்கி காத்திருக்கிறேன்
பல கனவுகளுடன்.....
wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

நினைவுகள்

 
எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்
nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn
 

அன்னை...

பத்து மாதம் சுமந்து
பரணியிலே பெற்றெடுத்து
பாலூட்டி தாலாட்டி...
பக்குவமாய் வளர்த்திடுவாய்...

பிள்ளை உள்ளம் தானறிந்து
ப்ரியமுடன் நடந்திடுவாயம்மா
கொஞ்சும் மழலை மொழியினிலே
இன்பத்தை காண்பாயம்மா.....

பச்சிளம் குழந்தயாய்
மண்ணில் தவழும் போது
பார்த்து ரசித்தவண்ணம்
அள்ளி அணைத்திடுவாயம்மா...

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
நீர் அடித்து நீர் விலகிடுமா?
உன் அன்பு என் நெஞ்சில்
என்றும் விலகிடாகதம்மா....
bbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbbb
  

ஏங்குது என் மனம்...

  அன்பே
நினைவுகளை மட்டுமே
விட்டு சென்றாய்
நினைவிழந்தவளாய் நான்
நீண்ட நாள் வாழ்கிறேன்...

வெந்து போன எனக்கு
பால் ஊற்ற வருவாயா???
இல்லையேல்....
அனாதையாய் நானாவேனா???

என்னுள் வேதனைகள் ஏராளம்
உன்னிடம் சொல்லிட
ஏங்குது என் மனம்....
jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

காத்திருக்கிறேன்...

 உன் மெளனம்
அழகானது தான்
எனினும்
உதிரும்
ஓரிரு வார்த்தைகளுக்காக
காத்திருக்கிறேன்...

நீ இல்லாத
தனிமைகள்
தீ மூட்டி என்னை
எரிக்கின்றன...
விரைந்து வா...
நான் குளிர்காய வேண்டும்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 

களவாடப்பட்ட கனவுகள்..

நான் அநேகமாக
மெளனமாய் இருக்கிறேன்
எதிரிலிருக்கும் சுவருடனும்
எதிர்ப்படும் மரத்துடனும்
அவ்வப்போது பேசுகிறேன்
சிரிக்கிறேன் ஏனெனில் எனக்கு
தெரியாமல் என் கனவுகள்
களவாடப்படுகின்றன.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் எனை
அண்டி வருவதேயில்லை.
என்னையறியாமல் எல்லாமே
மாறிப் போயிற்று ஓர் இரவில்...
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

என் தனிமை காதலை.....

உனக்கு தெரியாமல்
உன்னை நேசித்தேன்
என்னுள் சுவாசித்தேன்
இருந்தும் உன்னிடம் - என்
காதலை சொல்ல யோசித்தேன்...

பாசத்தை காட்டினாய்
பண்புடன் பழகினாய்
உன் சிறு குறும்பை கூட ரசித்தேன்
உனக்கு தெரியாமல்

உலகமறிய இவளுக்கு
ஊக்கங்கள் நீ தந்தாய்
உன் அன்பால்
உயர பறக்க வைத்தாய்

தயக்கம் மரியாதை - என்
காதலை சொல்ல மறுத்திட
என்னுள் மறைத்தேன்
என் தனிமை காதலை.....
nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

ஏன் நீ புரியவில்லை????

 அன்பிற்கு ஏங்குகிறேன்
யாருக்கும் புரியவில்லை
என்னை புரிந்த
உனக்குமா புரியவில்லை???

எல்லாம் நிறைந்திருந்தும்
வெறுமையாய் என் இதயம்....
வேதனைகள் மட்டுமே
நிரம்பலாய்....

சொல்லியழ நீ இருந்தும்
சொல்ல மனம் தடுக்கிறது-ஏனெனில்
அன்பின் அரசன் நீயல்லவா.........
உன் அன்பை பெற முடியாமல்
தவிப்பவள் நானல்லவா...........

என் கண்ணை பார்த்தவுடன்
என் வேதனை நீ அறிவாய்-இன்று
என் கண்களை பார்த்தும்
ஏன் நீ புரியவில்லை????
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

என் இதயம்....

 நேற்று என்னை பிடித்த அவளுக்கு
ஏனோ இன்று பிடிக்கவில்லை
யோசிக்கிறேன் புரியவில்லை
என் இதயத்துக்கு

என் உயிர் நீ என்றாள்
என் உறவு நீ என்றாள்
எல்லாம் நீயே என்றாள்
ஆனால் இன்று???

ஆயிரம் புன்னகை சிந்தும்
அவள் உதட்டில்
இன்று தொடரும் நிசப்தம்
ஏனோ புரியவில்லை எனக்கும்...

சொந்தமாய் உனை நினைத்து
சொர்க்கத்தில் உலா வந்தேன்
ஆனால் நீயோ
மெளனமொழி பேசி பேசி
கொல்லாமல் கொல்வதேனோ??

காரணம் தெரியாமல்
விம்மி அழுகிறது
என் இதயம்....
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
 

கல்லறை..

உன்னை
பிரிந்து விட்ட
என்னுணர்வுகளின்
நிஐத்துக்காய்
துடிதுடித்து
அழுகிறது
என் மனம்

ஒரு முறையேனும்
நீ என்னைக்
கண்டுகொள்ள
வருவாயெனில்
என் கல்லறையிலும்
வாசல் வைத்து
காத்திருப்பேன்
உனக்காக மட்டுமே....
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

பிடித்திருக்கிறது எனக்கு...

 விடியும் விடியல் பிடிக்கவில்லை
உதிக்கும் சூரியன் பிடிக்கவில்லை
பூக்கும் பூக்கள் பிடிக்கவில்லை
வீசும் காற்றும் பிடிக்கவில்லை

உருண்டு ஓடும் அலைகள் பிடிக்கவில்லை
அலைந்து திரியும் காதலர்களையும் பிடிக்கவில்லை
சினிமாவும் பிடிக்கவில்லை
சின்னதிரையில் அழுது புலம்பும் நாயகிகளையும் பிடிக்கவில்லை

தினம் சினுக்கும் அலைபேசிகள் பிடிக்கவில்லை
தொல்லை தரும் எஸ்எம்எஸ்கள் பிடிக்கவில்லை
இம்சை தரும் இமெயில்கள் பிடிக்கவில்லை

தனிமையும் பிடிக்கவில்லை
இனிமையும் பிடிக்கவில்லை
உறவுகள் பிடிக்கவில்லை
அழும் குழந்தையும் பிடிக்கவில்லை

அழகான என் காதலும் பிடிக்கவில்லை
இனிமையான நட்பும் பிடிக்கவில்லை
என்னை பிடித்த உன்னையும் பிடிக்கவில்லை
உனக்கு பிடித்த என்னையும் பிடிக்கவில்லை

நான் ரசித்த எதுவும் பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காத மரணத்தை மட்டும்
ஏனோ பிடித்திருக்கிறது எனக்கு...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 

எனது தேவதை..

 பகல் பொழுதினில்
பாதி தூக்கம் கொண்டு மீதி தூக்கம்
வரும் போது
அழகிய உருவமாய்..
அகிம்சை வாதியாய்...
ஆசையின் நிலவாய்...
இன்பத்தின் வழியாய்...
இரகத்தின் உயிராய்...
உண்மையின் உறவாய்...
உருவத்தில் புது மாற்றமாய்...
ஊட்டி வளந்தவளாய்....
ஊரின் கண்பட்டவளாய்....
எனது தேவதையாய்....
ஏக்கத்தின் புது வீக்கமாய் வந்து...
என் தூக்கத்தை கெடுக்காதே.....
llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

நீ தந்த பிரிவு....

கண்மணியே!

என நினைவுகளை கலைத்து
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து
நித்தம் ஒரு சித்திரவதை
நீ தந்த பிரிவு

நீ
இல்லாத இரவில் பகலால்
வாடுகிறேன்
நிலவாய் வந்துவிடு
நானும் கொஞ்சம்
ஆனந்தம் கொள்ள......
kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

காதல்


நீ
சிந்திச் சென்ற
பார்வை மழையில் விதையேயின்றி
முளைத்தது என் மெல்லிய காதல்
நான் உறங்கும் போது உறங்க
மறுக்கும் என் இமைகள் - நொடிக்கு
ஒருமுறை உன் பெயரை
உச்சரிக்கும் என் உதடுகள் - இவை
யாவும் நீ தந்த காதலின் விளைவே..
eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee

காத்திருக்கிறேன்.....

பெண்ணே
நான் புன்னகைத்த
போதெல்லாம்
மௌன விரதம் இருந்த
நீ - நான் கண்ணீர்
சிந்தும் போது
புன்னகை செய்வது
ஏனடி?

காத்திருக்கிறேன்
விடியலுக்காக
ஏட்டில்
மட்டும் மல்ல
வாழ்விலும்
வசந்தம் வரட்டும்
என்பதற்காக.......
vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

என்னில் நீ..

என் உதிரத்தில் கலந்தவளே

உன் விழிகளுக்குள்
என்ன ஒரு மாயம்
உன்னை காணும் போதெல்லாம்
ஊமையாகின்றேன்

இன்னும் நீ
என்னில்
வாழ்கிறாய்
என்பதற்கு - என்
உணர்வுகளும் - என்
உள்ளமும் - என்
உதறல்களும் - என்
கனவுகளும்
சாட்சி.....

எனது இதய நதியின்
ஓடமாய்
உன் நினைவுகள்
என்றும்
ஓடிக்கொண்டே இருக்கும்
என்றும் என்னில் நீ...
hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

ஆழிப்பேரலையே..

 ஆழிப்பேரலையாய்
ஆவேசமாய் நீ வந்து...
ஆயிரம் ஆயிரம் உயிர்களை
ஆவேசமாய் அள்ளி சென்றாய்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடினும்
ஆறிடுமா எமக்கு நீ தந்த காயம்....

இயற்கையின் விந்தையும் பெரிது
இயற்கையின் சீற்றமும் பெரிதென
இயற்கையாய் புரியவைத்துச் சென்ற
இம்சை அரசனே ஆழிப்பேரலையே....

உறங்கிய உறவுகளை உறக்கத்தில் அள்ளிசென்றாய்
உறங்காத உறவுகளை உறங்காமல் அள்ளிச்சென்றாய்
உன் பசி தீர்த்திட ஏன் உயிர்கள் மேல் ஆசை கொண்டாய்?
பல்லாயிரம் உயிர்களும் உனக்கென்ன பாவம் செய்தனர்?
பரிதாபம் காட்டாமல் பவ்வியமாய் இழுத்துச்சென்றாய்...

ஒவ்வொரு ஆண்டிலும் ஓர் நாள் உன் நாளாய்
ஓசையுடன் வந்து தடம் பதித்து நீ சென்றாய்..
அந்நாள் கறுப்பு நாள் எம்வாழ்வில்
உன்வருகையால்
கணவனை இழந்து விதவையாய் எத்தனை பெண்கள்
மனைவியை இழந்து தனிமையில் எத்தனை ஆண்கள்
பெற்றோரை இழந்து தனிமையில் தவித்திடும் குழந்தைகள்
பிள்ளைகளை  இழந்த சோர்ந்திட்ட பெற்றோர்கள்...
இழப்புக்கள் ஏராளம் கூறிட
வார்த்தைகளில்லை.....
tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக