செவ்வாய், 10 ஏப்ரல், 2012

நேருவின் பிடிவாதம்


நேருவின் பிடிவாதம்

தொடர்ந்தது நேருவின் பிடிவாதம்-----உடைந்தது ஒருங்கிணைந்த இந்தியா.

இன்று இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாடும் முஸ்லீம்கள் ஆதியிலிருந்தே வறுமையில் வாடுபவர்கள் அல்ல, மாறாக அந்நிய ஆக்ரமிப்பாளர்களாகிய ஆங்கிலேயர்களுக்கெதிராக ஆயுதப்புரட்சியில் ஈடுபட்டக் காரணத்தால் சினங்கொண்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அவர்களின் பொருளாதாரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து அபகரித்துக்கொண்டனர் இன்றளவும் முஸ்லீம்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாடுவதற்கு இதுவே முக்கியக் காரணம் என்று வரலாற்றாசிரியர் திவான் அவர்கள் *இந்திய சுதந்திரப் போரில் முஸ்லீம்களின் பங்கு* எனும் நூலில் குறிப்பிட்டிருந்ததையும், இன்றைய *ரங்கநாத் மிஸ்ரா அவர்கள்* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாடும் முஸ்லீம்களின் வறிய நிலையை ஆய்வு செய்து அரசுக்கு அளித்த அறிக்கையையும் ஒப்பிட்டு கடந்த கட்டுரையில் எழுதி இருந்தோம்.

 ஆங்கிலேயர்களிடம் இழந்த உரிமைகளை இந்தியாவின் புதிய அரசிடமிருந்து அடைந்து கொள்ளலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் முஸ்லீம்கள். ஆனால் சுதந்திரத்திற்கு முன்பே அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. 1946ல் நடந்த தேர்தலில் அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் வெற்றிப் பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமரமுடியாத நிலை ஏற்பட்டதால் ஜின்னா சாஹிப் அவர்கள் நேருவிடம் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லீம்களுக்கு போதுமான இடஓதுக்கீடு கேட்டார்.

 மஹாத்மா காந்தியின் வற்புருத்தலின் பேரில் ஒத்துக்கொண்ட நேரு அவர்கள், பட்டேல் போன்றவர்களின் தூண்டுதலினால் அதை நடைமுறைப்படுத்த மறுத்தார். நேருவின் பிடிவாதத்தையும் உள்நோக்கத்தையும் அறிந்த ஜின்னா சாஹிப் அவர்கள் வெள்ளையரால் நசுக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இடம் பிடித்துக் கொடுத்து எதிர்காலத்தில் வறுமையற்ற வாழ்வை உருவாக்க வேண்டும் என்று தீவிரமாக சிந்திக்கும் நிலைக்கு ஜின்னாசாஹிப் அவர்களுடன் முஸ்லீம் தலைவர்கள் தள்ளப்பட்டனர்.

*தொடர்ந்தது நேருவின் பிடிவாதம் அதனால் உடைந்தது ஒருங்கிணைந்த இந்தியா.* நேருவின் பிடிவாதத்தினால் முஸ்லீம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதனால் பரிவினை உருவானது பிரிவினையின் போது ஏராளமான முஸ்லீம்கள் பாகிஸ்தானை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆதாரம்
http://www.flipkart.com/book/jinnah-jaswanth-singh-india-partition/8129115409
- மொத்த முஸ்லீம்களும் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றுவிட்டால்
இந்தியாவிற்கு பேராபத்து ஏற்படலாம் என்று அஞ்சிய நேரு அவர்கள் இந்தியாவில் தங்கிக் கொள்ளும் முஸ்லீகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதாக மீண்டும் பொய்யான வாக்குறுதி ஒன்றை அறிவித்தார்.
 நீங்கள் உயிருக்கும் மேலாக நேசித்த இந்திய மண்ணில் தங்கி விடுங்கள், பிரிந்து செல்லாதீர்கள் என்று முஸ்லீம்களை நோக்கி உருக்கமாக காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானில் தங்கிவிட்ட சீக்கியர், மற்றும் ஹிந்துக்களை ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானியர்கள் கொன்று விட்டாலும் கூட இந்தியாவில் தங்கி விட்ட இஸ்லாமிய சிறு குழந்தையைக் கூட ஹிந்துக்களாகிய நாம் பாதுகாக்க வேண்டும் என்று ஹிந்துக்களை நோக்கியும் உருக்கமாக காந்தியடிகள் கேட்டுக் கொண்டார்.
நேரு அவர்களின் வாழ்வாதார வாக்குறுதியையும், காந்தியடிகள் அவர்களின் உயிருக்கு வழங்கிய வாக்குறுதியையும், நம்பிய முஸ்லீம்கள் இந்திய மண்ணை நேசித்து பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தனர்.

*இந்திய அரசியல் சாஸன சட்டம்* ஹிந்து, கிருஸ்தவ, சீக்கிய, முஸ்லீம் மதங்களையுடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டக் குழுவில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக தன்னையே அர்ப்பனித்துக் கொண்ட அம்பேத்கர் போன்ற மாமேதைகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களால் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பையும், வாழ்வாதார உரிமைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்னும் வழிபாட்டுத் தலங்கள் சுதந்திரத்திற்கு முன்னுள்ள நிலைத் தொடரும் என்றும், எழுதி வைத்தனர். இதைக்கேட்டு சந்தோஷம் அடைந்த முஸ்லீம்கள் அதற்கடுத்து வரிசையாக நடந்த வெறுக்கத்தக்க நிகழ்வுகள் மூலமாக ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனைப் பட்டனர். -

இந்தியாவை நேசித்து இந்தியாவுடன் தங்கிக்கொள்ளும் இஸ்லாமிய சிறு
குழந்தைக்கும் கூட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றுக்கூறியதுடன், பாகிஸ்தானுக்கு  வாக்களித்த 55 கோடியை வாங்கிக் கொடுப்பதற்காக உண்ணா விரதம் இருந்த காந்தியடிகளை முஸ்லீம் வேடமிட்டு சுட்டு சாய்த்தான் கொடியவன் கோட்சே, காந்தியடிகளின் உடல் மண்ணில் சாய்ந்து அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்குள் எண்ணிலடங்காக அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவித்து காந்தியடிகளின் சவக்குழியில்
சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், மதச்சார்பின்மைiயும் சேர்த்தேப் புதைத்து விட்டனர்.  வாழ்வாதார உரிமைகளும், வழிப்பாட்டு உரிமைகளும் வழங்கப்படுவதாக வாக்களித்தப் பிரதமர் நேரு அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்திலேயே பாபர் மஸ்ஜிதிற்குள் ராமர் சிலை வைக்கப்பட்டு அரசியல் சாஸன சட்டத்தில் *வழிபாட்டுத் தலங்கள் சுதந்திரத்திற்கு முன்னுள்ள நிலைத் தொடரும் என்று எழதப்பட்ட மை காய்வதற்குள்* வரம்பு மீறி சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமையை மண்ணில்  புதைத்தனர், பட்ட இடத்திலேயேப் படும் என்பது போல் வெள்ளையர்களால் பொருளாதாரத்தில் திட்டமிட்டு நசுக்கப்பட்ட முஸ்லீம்களை அதற்கடுத்து உருவான அரசும் நம்பிக்கை துரோகமிழைத்து கைவிட்டதால் இன்று இரண்டு ஆடைகளைக் கூட அடைய முடியாத நிலையிலும், ஒரு வேளை உணவுக்கு திண்டாடக் கூடிய நிலையிலும், நிலையான தங்குமிடமின்றியும், வெட்ட வெளியில் கழிப்பிடங்களை நோக்கி செல்பவர்களாகவும் தள்ளப்பட்டனர்.  

பொடா, தடா, போன்ற அனைத்து பயங்கரவாத தடுப்பு சட்டங்களும் ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாத அப்பாவி முஸ்லீம்களின் மீதே திட்டமிட்டு பாயச்செய்கின்றனர் கோட்சேயின் வாரிசுகள்.  ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாத அப்பாவிகளை தீவிரவாதிகள் என்ற முத்திரைகுத்தி என்கவுன்டரில் ஈவிறக்கமின்றி சுட்டுத் தள்ளுகின்றனர். வரி செலுத்துவது குடியுரிமையை நீட்டிப்பதற்கு பெறுவதற்கு மட்டுமே, இந்திய மண்ணில் விளையும் செல்வங்களை அனுபவிப்பதற்கல்ல. என்பதை வாழ்வாதார உரிமைகள், மற்றும் வழிபாட்டு உரிமைகள் நேருவில் தொடங்கி இன்றைய மன்மோகன்சிங் வரை மறுக்கப்டுவதன் மூலம் உணர்த்தி விட்டனர்.

 வாடகை செலுத்திக் கூட வாழ்ககை நடத்த வசதி இல்லாத வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் கோடிக் கணக்கான இந்தியக் குடிமக்கள் தவியாய் தவிக்கும் பொழுது கோடி, கோடியாக கொள்ளயடித்து கணக்கில் காட்ட முடியாத கருப்புப் பணத்தையும், தங்கக் கட்டிகளையும் புதைக்க இடமில்லாமல் திரியும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பழைய மாமல்லபுரத்தில் *50** **ஏக்கர் நிலம்* ஒதுக்கிக் கொடுத்திருக்கின்றார் சிறுபான்மை காவலர் கலைஞர் அவர்கள். இந்தியாவில் நாம் வரி செலுத்தி இந்திய குடிமக்களாக இருந்தாலும் அகதிகள் போல் நடத்தப்படுவதை உணர்நத முஸ்லீம்கள் அந்நிய நாட்டில் பிழைப்புத் தேடுவதற்காக பாஸ்போட் எடுத்து டுபாகூர் ஏஜன்டுகளிடம் பணத்தைக்கட்டி அதில் கரை கடந்தவர்கள் சிலர், மூழ்கியவர் பலர்.  கரை கடந்தப் பலரின் நிலையோ இன்னும் அங்கே அந்தோப் பரிதாபம். கெந்தக பூமியின் சுட்டெக்கும் பாலை வெயிலில்

*ஆடு, மேய்ப்பவர்களாக,

* கட்டடம் கட்டுவதற்கு கற்களை சுமப்பவர்களாக,

* ரோடு கூட்டுபவர்களாக,

* சுமை தூக்கும் கூலிகளாக ,

* கார் கழுவுகின்றவர்களாக,

* கக்கூஸ் கழுவுகின்றவர்களாக,

* உணவகங்களில் டேபிள் துடைப்பவர்களாக, எச்சித் தட்டை     கழுவுகின்றவர்களாக,

* வீட்டு வேலைக்காரர்களாக,

* தோட்டக்காரர்களாக,

கால் நூற்றாண்டுகளைக்கடந்து அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் இளமையைத் தொழைத்து முதுமையை அடைந்து தாயகம் திரும்புகினறனர்.  இதில் இன்னும் வேதனை என்னவென்றால் ? இத்தனை ஆண்டுகள் கடந்து தாயகம் திரும்புகின்ற பலருக்கு சொந்த வீடு இருக்காது. வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் கடமைகள் முடிவதில்லை. கப்பலுக்கு சென்றதால் கைநிறைய சம்பாதிக்கின்றான் என்ற கணிப்பில் கடன்காரன் கால்நூற்றாண்டுகளாக கரந்து கொண்டிருப்பான். ஒரு வேளை சோற்றுக்கு வழி இல்லாதவர்கள் படிக்க முடியாதக் காரணத்தால் படிக்காமல் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடிச் சென்று மேற்காணும் வேலைகளில் மிகவும் குறைந்த சம்பளத்தில் சேருவதால் லட்சக் கணக்கில் செலவு செய்து வந்தக் கடனையும் சீக்கிரத்தில் அடைக்க முடிவதில்லை, குடும்பத்திற்கான அடிப்படை கடமைகளையும் செய்து முடிக்க முடிவதில்லை.

அதில் பலர் தாயகம் திரும்பாமலேயே வந்த இடத்தில் வாகன விபத்துக்கள் மூலமும், ஹார்ட் அட்டாக் மூலமும் அகால மரணத்தைத் தழுவி விடுகின்றனர். தலைமாட்டருகே நின்று அழுது நெற்றியில் முத்தமிட்டு எடுத்துச்சென்று புதைக்கக்கூட நாதியில்லாமல் ஊரார் கூடி புதைக்கும் பரிதாபத்திலும் பரிதாப நிலை.

யாருக்காக பிறந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணுக்கு பிழைப்பு தேடிவந்து மண்ணோடு மண்ணாகப் மடிந்துப் போனாரோ அன்னாருடைய வாரிசுகளுக்காக 5 ரியால் 10 ரியால் வசூல் செய்து அனுப்பி வைக்கும் அடுத்த அவல நிலை. என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று வாளேந்தி போர் புரிந்து சுதந்திரம் பெற்றுந் தந்த வாரிசுகள் இன்று என்றுத் தனியும் எங்கள் வறுமை நிலை என்று ஏங்கித் தவிக்கின்றனர்.

Thanks to Mr.J.Nizar Ahamed (P.T.M)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக