சனி, 17 டிசம்பர், 2011

மைஉண்


மைஉண்

October 16th, 2011 § Leave a Comment
தெருவில் நடக்கும்போது
நன்றாக பாருங்கள்….
அதோ ஒரு நடக்க
முடியாத ஒருத்தர்
வியர்க்க வியர்க்க எங்கோ
செல்கிறார்….
சற்று தூரத்தில் அதோ
ஒரு பார்வையற்றவர்
ஊன்றுகோல் துணையுடன்
சென்று கொண்டிருக்கிறார்
நாம் கால்கள் இருந்தும்
சக்தியற்று இருக்கின்றோம்
அவரோ கால்கள் இல்லாவிட்டால்
என்ன, என் முன்னேற்றத்தை
யாராலும் தடுக்க முடியாது
என முன் செல்கிறார்
நாம் கண்கள் இருந்தும்
வெளிச்சம் தெரிந்தும்
இருளை தேடி செல்கிறோம்
அவரோ என் பார்வை தான்
இருளே தவிர என் வாழ்கை
அல்ல என முன்னேறி
செல்கிறார்.
தான் அழகில்லை, தனக்கு
திறமை இல்லை, தன்னால்
முடியாது, என நினைக்கும்
ஒவ்வொருவரும் உங்களை
நிலைகண்ணாடியில் பாருங்கள்
ஏனென்றால் கண்ணாடி
உண்மைதான் பேசும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக